தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு அழுகிப்போன பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்ககோரி கோஷம் எழுப்பினர்.
பின்னர் கோட்டாட்சியர் விஜயாவை நேரில் சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவினை வழங்கினர். அந்த மனுவில், "இந்த ஆண்டு பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் வெள்ளை நோயால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.