தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின் அலுவலர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தக் கோரி தர்ணா - மின் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த கோரி தர்ணா

தூத்துக்குடி: மின் வாரியத்திற்கு 84 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய மின் அலுவலர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என சிஐடியு சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

மின் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த கோரி தர்ணா
மின் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த கோரி தர்ணா

By

Published : Jul 13, 2021, 10:39 PM IST

தமிழ்நாடு மின் ஊழியர் சங்கம் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பாக தூத்துக்குடியில் உள்ள மாவட்ட தலைமை மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் உயர் அலுவலரைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்குத் தமிழ்நாடு மின் ஊழியர் சங்க மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இந்தப் போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படும் மின் உயர் அலுவலரைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து மின் ஊழியர் சங்கம் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

"தூத்துக்குடி நகர மின் பொறியாளராக விஜய சங்கர பாண்டியன் என்பவர் பணியாற்றிவருகிறார். மின்வாரியத்தின் விதிமுறைகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக விஜய சங்கரபாண்டியன் ஒரே இடத்தில் பணிபுரிந்துவருகிறார். இந்த நிலையில் அவர் தொழிலாளர்களுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவதை எதிர்த்து கேட்டால் எதிர்த்து கேட்பவர்களை பணியிடை நீக்கம் செய்வது, அவர்களின் வருங்கால வைப்பு நிதி பல பலன்கள் கிடைக்கப்பெறாமல் செய்வது உள்ளிட்ட தொழிலாளர் விரோத போக்கினை கையாண்டுவருகிறார்.

கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜுவுக்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்டவர் என்பதனால் அவர் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செயற்பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் மீது தூத்துக்குடி தலைமை மின் பொறியாளரிடம் புகார் அளிக்கப்பட்டதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விஜயசங்கர் பாண்டியனின் கைப்பாவையாக தலைமை பொறியாளர் செயல்படுகிறார்.

இதையடுத்து திருநெல்வேலி மண்டல மேற்பார்வையாளரிடம் புகார் அளித்ததற்கு இந்தப் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என ஒதுங்கிக் கொண்டார். ஆகவே இவர்களுக்குள் இந்தப் பிரச்சினை தொடர்பாக ஏதோ தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கிறோம்.

தனியார் நிறுவனம் ஒன்றிற்கு உயரழுத்த மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் மின்வாரியத்திற்கு 84 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது மின்வாரிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய சங்கரபாண்டியன் மீது விசாரணை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட குழுவில்கூட தனது செல்வாக்கு, பணபலத்தைப் பயன்படுத்தி தனக்கு வேண்டிய அலுவலர்களை நியமித்து விசாரணையை முடிக்க முயற்சி எடுத்ததோடு மட்டுமல்லாமல் பதவி உயர்வையும் பெற்றுக்கொண்டார்.

இதுமட்டுமல்லாமல் 48 மின் இணைப்புகளுக்கான பாக்கித் தொகை வசூலிப்பதில் முறைகேடாகச் செயல்பட்டுள்ளார். இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

இது குறித்து கடந்த 30 நாள்களுக்கு முன்பாகவே மின் துறை அமைச்சருக்கும் மின்வாரிய தலைமைப் பொறியாளருக்கும் புகார் அனுப்பிவிட்டோம். ஆனால் இதுவரை மின் வாரியத்தால் விஜய சங்கரபாண்டியன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம்.

எனவே அலுவலர் விஜய சங்கரபாண்டியன் மீது தமிழ்நாடு மின் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கு துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details