தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு! - மின்சாரம் தாக்கி கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By

Published : Oct 7, 2020, 5:12 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள புல்லா கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 28).

இவர் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரில் நடைபெறும் புதிய வீடுகட்டும் பணியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், வீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுவற்றை தண்ணீர் கொண்டு ஈரப்படுத்தும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று சுவற்றில் மின்சாரம் பாய்ந்ததில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேற்கு காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன சரவணனுக்கு கற்பகசெல்வி என்ற மனைவியும் நந்துஜா, அட்விகாபானு என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details