தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடியுரிமை விவகாரம் தேசிய பிரச்னை - அமைச்சர் கடம்பூர் ராஜு - குடியுரிமை விவகாரம் தேசிய பிரச்னை

தூத்துக்குடி: 'குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் தேசிய பிரச்னை. ஒட்டுமொத்த மக்களின் உணர்வினைப் புரிந்து மத்திய அரசு அதில் மாற்றம் செய்யலாம்' என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

CAA is a National Issue says Kadambur raju
CAA is a National Issue says Kadambur raju

By

Published : Dec 26, 2019, 11:07 PM IST

தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர். செ. ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தீவிரமாக வாக்கு சேகரித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கிறது. அதிமுக கட்சிக்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து வாக்கு சேகரித்துவருகிறோம்.

குடியுரிமை விவகாரம் தேசிய பிரச்னை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்களை செயல்படுத்திவருகிறோம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய பிரச்னை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு அதில் மாற்றம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details