தமிழ்நாடு

tamil nadu

கால்வாயை சீரமைத்த கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன்

By

Published : Sep 18, 2020, 1:54 PM IST

திருநெல்வேலி: நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் 13 கி.மீ உள்ள சூறாவளி கால்வாய் சீரமைக்கப்பட்டது.

உழவன் கால்வாய்
உழவன் கால்வாய்

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பினர், ஆம்னி கனெக்ட் தொழிற்சாலையுடன் இணைந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் உள்ள கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 13 கிலோ மீட்டர் நீளமுள்ள சூறாவளி கால்வாயை சீரமைக்கும் பணிகள் கடந்த 21 நாள்களாக நடைபெற்று வந்தது. சுமார் 4 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் கால்வாயை சீரமைத்துள்ளனர்.

இக்கால்வாய் சீரமைக்கப்பட்டதன் மூலம் தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 ஏரிகள் தண்ணீர் வசதி பெறுவதோடு 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும், பத்து கிராம மக்களுக்கும் பயன்பெற்றுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details