திருநெல்வேலி(Student protest Based News):நெல்லை டவுன் சாஃப்டர் அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நெல்லை உள்பட தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியிலும் ஒருவித விழிப்புணர்வு ஏற்பட்டு தரமற்ற பள்ளி கட்டடங்களைச் சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்
இந்த நிலையில் நெல்லை மாவட்டம், ரெட்டையார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறை கட்டடம் தரமற்றதாக இருப்பதைக் கண்டித்தும் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரக்கோரியும் மாணவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மாணவர்களைப் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர்.