திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நாங்குநேரி தொகுதியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வாக்கு அதிகளவில் அதிமுகவுக்கு இருப்பதால், அதைத் தடுக்கும் நோக்கத்தில் திமுகவினர் உண்மைக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டினார்.
சிறுபான்மையினருக்கு அதிமுக விரோதமாகச் செயல்படுவதாக திமுக அரசியல் நாடகம் நடத்திவருவதாகவும் ஆனால் திமுக கூட்டணியில் உள்ள ஒரு இஸ்லாமிய கட்சிதான் இதுபோன்ற விவகாரங்களில் ஈடுபட்டுவருவதாகவும் விமர்சித்தார்.