தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொடர் கனமழை - திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - Tamilnadu rain

வடகிழக்கு பருவமழை காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (நவ.09) அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

By

Published : Nov 9, 2021, 9:53 AM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று (நவ.08) பகல் முழுதும் விட்டு விட்டு அவ்வப்போது மிதமான மழை பெய்தது. இந்நிலையில் இரவு திடீரென பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால், இன்று ( நவ.09) அனைத்துப் பள்ளி கல்லூரிகளுக்கும் ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார்.

இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டத்திலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நெல்லை உள்படத் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கடும் வெள்ளத்திலும் கட்டிங் போட்ட குடிமகன்கள்!

ABOUT THE AUTHOR

...view details