தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று (நவ.08) பகல் முழுதும் விட்டு விட்டு அவ்வப்போது மிதமான மழை பெய்தது. இந்நிலையில் இரவு திடீரென பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால், இன்று ( நவ.09) அனைத்துப் பள்ளி கல்லூரிகளுக்கும் ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார்.