தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 4, 2021, 12:58 PM IST

ETV Bharat / city

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நெல்லை ஆட்சியர்!

திருநெல்வேலி: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணு கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நெல்லை ஆட்சியர்
நெல்லை ஆட்சியர்

கரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களுக்கு அச்சத்தை போக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் பல அலுவலர்கள் தடுப்பூசி போட்டு வரும் நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று (பிப்.04) பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் வைத்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, அப்போது தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஏற்கெனவே நேற்று (பிப்.03) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நெல்லை ஆட்சியர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நெல்லை ஆட்சியர்

இதையும் படிங்க: இதுதான் இந்தியாவின் ஆன்மா... வைரல் புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்த ஆனந்த் மகேந்திரா!

ABOUT THE AUTHOR

...view details