நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் வெடிகுண்டு, அரிவாளுடன் சுற்றித்திரிந்த முத்து மனோ (21), சந்திரசேகர் (22), கண்ணன் (23), மாதவன் (19) ஆகிய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஏழு அரிவாள்கள், ஆறு நாட்டு வெடிகுண்டுகளைக் காவலர்கள் பறிமுதல்செய்தனர். களக்காடு காவலர்கள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.