தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெல்லையில் திடீர் மழை - வானிலை மைய அறிக்கை

நெல்லையில் நேற்று இரவு திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது.

நெல்லை மாநகரில் பெய்த மழை
நெல்லை மாநகரில் பெய்த மழை

By

Published : Dec 31, 2021, 9:20 AM IST

நெல்லை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, டவுன், பெருமாள்புரம், கேடிசி நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் சுமார் 15 நிமிடம் பலத்த மழை பெய்தது.

தாழ்வான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வண்ணாரப்பேட்டை பாளையங்கோட்டை மார்க்கெட் ஆகிய இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

நெல்லை மாநகரில் பெய்த மழை

திடீர் மழை

வடகிழக்கு பருவமழைத் தாக்கத்தால் நெல்லையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தொடர் பெய்து நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக நெல்லையில் மழை இல்லாமல் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்தச் சூழலில் நேற்று பெய்த திடீர் மழை பெய்தது.

இதையும் படிங்க: Orange Alert: தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

ABOUT THE AUTHOR

...view details