தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாங்குநேரி வாக்காளர்களுக்கு கோடான கோடி நன்றி! - நாம் தமிழரை முந்திய சுயேச்சை - Hari Nadar Thanks to Nanguneri Voters

நெல்லை: நாங்குநேரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்த ஹரி நாடார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Hari Nadar in Nanguneri

By

Published : Oct 25, 2019, 4:33 AM IST

Updated : Oct 26, 2019, 7:40 PM IST

நாங்குநேரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் நான்காயிரத்து 242 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார்.

இது குறித்து ஹரிநாடார், பெருந்தலைவர் காமராஜர் வழியில் நேர்மையாக தேர்தலை சந்தித்தோம். திமுக, அதிமுக கட்சிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்றுள்ளன. எனக்கு வாக்களித்த சமுதாய, தொகுதி மக்களுக்கு நன்றிகள் எனத் தெரிவித்தார்.

நாங்குநேரி வாக்காளர்களுக்கு ஹரி நாடார் நன்றி


நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. திமுக ஆதரவில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தோல்வி அடைந்தார். நோட்டா ஐந்தாவது இடத்தை தனதாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராதாபுரம் வெற்றியோடு திமுகவிற்கு 3 வெற்றிகள் - தயாநிதிமாறன்

Last Updated : Oct 26, 2019, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details