தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெல்லையில் அரசு பயிற்சி மருத்துவர்கள் தர்ணா - திருநெல்வேலி செய்திகள்

நெல்லையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

மருத்துவர்கள் திடீர் தர்ணா
மருத்துவர்கள் திடீர் தர்ணா

By

Published : Jan 12, 2022, 9:32 AM IST

திருநெல்வேலி:அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 150க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கரோனோ வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பயிற்சி மருத்துவர்களின் தேவை அதிகமாக உள்ளது.

மருத்துவர்கள் திடீர் தர்ணா போராட்டம்

கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயிற்சி மருத்துவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊக்கத் தொகையை வழங்கக் கோரிக்கை

உடனடியாக அரசு தங்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனை வலியுறுத்தி, இன்று ஜனவரி 12முதல் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இனி 'தேவை'யில்லை பணம் நோட்டாக; தகுதியால் சேரலாம் 'நீட்'டாக...!

ABOUT THE AUTHOR

...view details