தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரபல நாதஸ்வரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழா - தவில் நாதஸ்வர இசைக்கலைஞர்கள்

பிரபல நாதஸ்வரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் கோவில் வீதிகளில் நூற்றுக்கணக்கான நாதஸ்வர, தவில் கலைஞர்கள் இசை பேரணி நடத்தினர்.

நூற்றாண்டு விழா
நூற்றாண்டு விழா

By

Published : Apr 11, 2022, 10:11 AM IST

Updated : Apr 11, 2022, 10:20 AM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில்உள்ள காருக்குறிச்சி என்ற கிராமத்தின் பெயரை, நாடு முழுவதும் உள்ளவர்கள் அறிய காரணமாக இருந்தவர் நாதஸ்வர கலைஞர் அருணாச்சலம். இவர் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் போன்றோரை தன் நாதஸ்வர கலையால் ஈர்த்த பெருமைக்குரியவர். தன்னுடைய இன்னிசை எழுப்பும் நாதஸ்வரக் கலையால் புகழ்பெற்று விளங்கிய இவர், 'கொஞ்சும் சலங்கை' எனும் திரைப்படத்தில் வந்த 'சிங்கார வேலனே தேவா...' என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூற்றாண்டு விழா:இத்தகைய சிறப்புகள் பலவற்றுக்கும் சொந்தக்காரரான காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழா கடந்தாண்டு ஜூன் 24ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் அவரது நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலியில் தமிழ் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழா நெல்லை டவுன் பகுதியில் நடைபெறுகிறது.

நாதஸ்வர இசை பேரணி

நாதஸ்வர இசை பேரணி: இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என திரளானோர் பங்கேற்க உள்ளனர். இந்த நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் திருக்கோவின் முன் தொடங்கி, நூற்றாண்டு விழா மண்டபம் வரை காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களது திருவுருவப் படத்துடன் நூற்றுக்கணக்கான தவில் நாதஸ்வர இசைக்கலைஞர்கள்நாதஸ்வரஇசை பேரணியை நடத்தினர்.

கவனத்தை ஈர்த்தது: இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து காருகுறிச்சி அருணாச்சலம் அவர்களால் இசைக்கப்பட்ட பாடல்களை நாதஸ்வரத்தில் உற்சாகத்துடன் இசைத்தபடியே, முக்கிய வீதிகள் வழியாக சென்று நூற்றாண்டு விழா மண்டபத்தை மீண்டும் அடைந்தனர். குறிப்பாக, 'சிங்கார வேலனே தேவா...' என்ற பாடலை நூற்றுக்கணக்கான நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்களுடன் இணைந்து இசைத்து சென்றது அங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படிங்க:பழனி மலைக்கோயிலில் தவில், நாதஸ்வரம் வாசித்து கலைஞர்கள் தர்ணா

Last Updated : Apr 11, 2022, 10:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details