தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமமுக நிர்வாகி வெட்டி கொலை - நெல்லையில் பரபரப்பு - அமமுக நிர்வாகி வெட்டி கொலை

நெல்லையில் அமமுக நிர்வாகியை சரமாரியாக வெட்டி கொலை செய்த, அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அமமுக நிர்வாகி வெட்டி கொலை
அமமுக நிர்வாகி வெட்டி கொலை

By

Published : May 28, 2022, 4:48 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி என்ற மணி (40). இவர் பாளையங்கோட்டையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். மேலும் பழைய கார்களை உடைத்து விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார்.

கருங்குளம் ஒன்றிய அமமுக நிர்வாகியான இவர், பாளையங்கோட்டையில் தொழில் செய்வதால் சுப்பிரமணி குலவணிகர்புரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு (மே27) அவர் கடையிலிருந்து வீட்டுக்கு வரும்போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டுக்குள் நடந்து சென்ற அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் சுப்பிரமணி என்ற மணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெல்லை மாநகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும் கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாக தேடி வரும் காவல்துறையினர், பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்துள்ள பதிவாகியுள்ள காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தலித் பெண் கொலை: திருடிய நகையை அடகு வைத்து ஒடிசாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர்கள் - விசாரணையில் அம்பலம்

ABOUT THE AUTHOR

...view details