திருநெல்வேலி: மன்னார்புரம் இந்திரா நகர் காலனியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் நிஷாந்த். இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து தனது வீட்டின் அருகேயுள்ள வீட்டு வாசல் இரும்புக் கதவின் மீது ஏறி விளையாடியுள்ளார்.
அப்போது வீட்டின் சுவர் திடீரென இடிந்து சிறுவனின் முதுகு மற்றும் கால் பகுதியில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. சிறுவன் மீது சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை நேரில் பார்த்த பென்சியால் என்பவர் உடனடியாக சிறுவனை திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.