சேலம்:பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சேலத்தில் திமுக இளைஞரணி செயலாளர்
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலத்தில் திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளராக திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு இலவச அரிசி வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, “கரோனோ காலத்தில் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கி வருகிறோம். வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மக்களுடன் இருப்பது திமுக. ஒன்றிணைவோம் வா திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்து, அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இலவச அரிசி வழங்கி வருகிறேன்.