தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓமலூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தமாகா தீர்மானம் - சேலம் தமாகா தலைவர் சுசீந்திரகுமார் பேச்சு

சேலம்: ஓமலூர் பகுதியில் புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

சேலம் ஓமலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டம்

By

Published : Oct 22, 2019, 5:40 AM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட 21ஆவது நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் உட்பட 200க்கும் மேற்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலம் ஓமலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டம்

இதில் பேசிய சுசீந்திரகுமார், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசுடன் இணைந்து பாடுபடும் என்றும் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக இடையேயான கூட்டணி தொடரும் என்ற ஜி.கே.வாசன் முடிவை வரவேற்கும் விதமாகவும், புதியதாக உதயமாகி இருக்கும் காடையாம்பட்டி தாலுகாவிற்கு பத்திரப்பதிவு அலுவலகம் வேண்டும் ஓமலூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படியுங்க:

ஸ்டாலின் சீமானை ஆதரிக்கிறாரா? - தமாகா இளைஞரணி தலைவர் கேள்வி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details