சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், பாஜக நெசவாளர் அணி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா,"தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும் முதலமைச்சராக முடியாது. திமுக ஆட்சிக்கு வர தமிழக மக்கள் விரும்பவில்லை. அவர்கள் வந்தால் ரவுடியிசம், நில அபகரிப்புகள் அதிகரிக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர்.
திமுக ஒரு ஊழல் கட்சி என, தந்தை பெரியார் 1962 ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டிருக்கிறார். அனைத்து மட்டங்களிலும் ஊழல் செய்யும் கட்சியாக திமுக உள்ளது. அதில் உச்சம் தான் 2ஜி ஊழல். அந்த ஊழலில் ஈடுபட்ட இருவரும் என்ன ஆவார்கள் என்று மார்ச் 15 ஆம் தேதி தெரிய வரும். அப்போது தமிழகத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகும்.