இது தொடர்பாக எஸ்.ஆர்.பார்த்திபன் கூறுகையில், "சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி கிராமம் மரத்துக்குட்டை பகுதியைச் சேர்ந்த சேட்டு-லலிதா தம்பதியின் மகன் சுஜீத்குமார், நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு திமுக நிதி உதவி! - நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்
சேலம்: நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சுஜீத்குமாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கினார்.
![நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு திமுக நிதி உதவி! S. R. Parthiban](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9306342-345-9306342-1603614572829.jpg)
S. R. Parthiban
720 மதிப்பெண்களுக்கு 635 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 7,286ஆவது இடத்தை பெற்றுள்ளார். அதனால் அவருக்கு ஊக்கத் தொகையாக திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. மாணவருடைய மருத்துவர் கனவு நனவாக திமுக சார்பில் வாழ்த்துகள் " என்றார்.
இதையும் படிங்க:7.5% இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு அனுமதியளிப்பாரா ஆளுநர்? தள்ளிப்போகும் கலந்தாய்வு!