தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 15, 2021, 6:40 AM IST

ETV Bharat / city

கரோனாவைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் தேவை - எம்எல்ஏ பாலசுப்பிரமணியன்!

சேலம்: கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் தேவை என சேலம் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலம்: கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் தேவை என சேலம் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன்
சேலம்: கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் தேவை என சேலம் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன்

கரோனா தொற்றின் இரண்டாவது அலை சேலம் மாவட்டத்தில் வேகமாக பரவி தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.

இந்தநிலையில் , பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த சேலம் தெற்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன், வீரபாண்டி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜமுத்து, சேலம் மேற்கு பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் ஆகியோர் அரசு மருத்துவமனை முதல்வர் முருகேசனிடம் கரோனா நோய் தொற்றைத் தடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்," சேலம் மாவட்டத்தில் கரோனோ தாக்கம் அதிகம் இல்லை என்று நேற்று ஆய்வு நடத்திய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு மாறான நிலையே தற்போது நிலவி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 9 லட்சத்து 40 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன.

அதில் 2 கோடியே 48 லட்சம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களில் 15 இலட்சத்து 9 ஆயிரம் பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் நோய் தாக்கம் அதிகரித்து, நாளுக்கு 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது இன்னும் சில நாள்களில் ஒரு லட்சம் என்ற அளவை எட்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில் காய்ச்சல் முகாமை அரசு வீடு வீடாகச் சென்று நடத்த முன் வரவேண்டும். ஊரடங்கு முழுமையாக அமல்படுத்த வேண்டும் .

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details