சேலம் எடப்பாடி தொகுதி, நங்கவள்ளி ஒன்றியம் பள்ளக்கானுரில் உயர் மின்னழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பவர்கிரிட் நிறுவனத்தைக் கண்டித்து மறியல் போராட்டம் நடந்ததால் பரபரப்பு நிலவியது.
இப்போராட்டத்தில் உயர் மின் கோபுர விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பெருமாள், சிபிஎம் நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் மேவை.சண்முகராஜா, விவசாய சங்க சங்ககிரி தாலுகா செயலாளர் ராஜேந்திரன், மாதர் சங்க மாவட்ட உதவி தலைவர் ராஜாத்தி, விவசாய சங்க தலைவர்கள் சுரேஷ், குருநாதன், சத்தியமூர்த்தி, ஜெயவேல், பழனிசாமி, சாமிநாதன், மாதையன், சுந்தரம், செந்தில், கண்ணன், சின்னதம்பி, உட்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.