தமிழ்நாடு

tamil nadu

ஆத்தூர் விபத்தில் 6 பேர் பலியான இடத்தில் சேலம் ஆட்சியர் ஆய்வு

By

Published : Aug 23, 2022, 1:31 PM IST

ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மற்றும் ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு செய்தார்.

ஆத்தூர் விபத்தில் 6 பேர் பலியான இடத்தில் சேலம் ஆட்சியர் ஆய்வு
ஆத்தூர் விபத்தில் 6 பேர் பலியான இடத்தில் சேலம் ஆட்சியர் ஆய்வு

சேலம்: சேலம் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் இன்று அதிகாலை சேலத்திலிருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஆத்தூர் முல்லைவாடி கிராமத்திலிருந்து வந்த ஆம்னி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த 5 நபர்கள் சம்பவ இடத்திலேயும், ஒரு நபர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.

மேலும், 5 நபர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

ஆத்தூர் விபத்தில் 6 பேர் பலியான இடத்தில் சேலம் ஆட்சியர் ஆய்வு

இதனைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மற்றும் ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் நேரில் பார்வையிட்டார்.

மேலும் நெடுஞ்சாலைத் துறையினரிடம் சாலைத் தடுப்புகளை மேலும் அதிகரித்திடவும், சாலை விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்தல் தொடர்பாக அறிவிப்பு பலகைகளை அதிகளவில் அமைத்திடவும் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: ஆத்தூரில் சாலை விபத்து... 6 பேர் பலியான சோகம்

ABOUT THE AUTHOR

...view details