சேலம்:மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 175 மாணவ - மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் இந்த பள்ளியைச்சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் 685 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 101-ஆவது இட தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று சாதனைப்படைத்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது இடம், மூன்றாவது இடம் என பள்ளியைச்சேர்ந்த மாணவ மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர்.