தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 7, 2020, 1:42 PM IST

ETV Bharat / city

50 சவரன் தங்க நகைகள் மாயம் - சேலத்தில் தொடரும் கைவரிசை!

சேலம்: ரயில்வே அலுவலரின் வீட்டிலிருந்து 50 சவரன் தங்க நகைகளையும் 15 ஆயிரம் ரொக்கத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

theft in salem
theft in salem

சேலம் சூரமங்கலம் அருகேவுள்ள சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு அலுவலராக பணியாற்றிவருபவர் பிரசாத். இவர் சூரமங்கலம் அருகேவுள்ள முல்லை நகரில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

இவரது உறவினர் இல்லத் திருமணம் சென்னையில் நடந்தது. இதற்காக பிரசாத் குடும்பத்துடன், இருநாள்களுக்கு முன் சென்னை சென்றனர். நேற்று வீடு திரும்பிய பிரசாத் வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகைகளும் ரொக்கம் 15 ஆயிரம் மாயமாகியிருந்தது.

இது குறித்து பிரசாத், சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி உதவி கமிஷனர் பூபதிராஜன், ஆய்வாளர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். இந்த வழக்கு குறித்து விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தனிப்படை அமைத்துள்ளார்.

சேலத்தில் 50 சவரன் தங்க நகைகள் மாயம்

சேலத்தில் கடந்த ஒரு மாத காலமாக வீடுகளில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் திருட்டுக்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மர்மமான முறையில் 14 மயில்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details