மகாத்மாகாந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு ரயில்வே பணிமனையில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி பூங்கா, 5 ஆயிரம் மரக்கன்றுகள் கொண்ட அடர் வனம் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இதனை தொடக்கி வைத்து ரயில்வே பணிமனையினை பார்வையிட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சேலம் கோட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஈரோடு ரயில் நிலையத்தில் 86 கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும் என்றும் தெரிவித்தார்.