சேலம்: கரோனா பாதிப்பு காரணமாக தொழிலின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாடக கலைஞர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாக உதவிகள் வழங்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட நலிவடைந்த நாடக நடிகர்கள் உள்ளனர். கரோனா காரணமாக திருவிழாக்கள், மேடை நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் உள்ளதால் வருமானமின்றி அவர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, பொது ஊரடங்கு காரணமாக, பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த நாடக கலைஞர்களுக்கு நிவாரணப் பொருள்களை இன்று வழங்கினார்.
ஒருவருக்கு ரூ.1000 மதிப்பில் நிவாரணம்