தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் ஓராண்டுக்கு முன்னர் விற்கப்பட்ட குழந்தை மீட்பு.!

By

Published : Nov 22, 2019, 8:47 PM IST

சேலம்: சேலம் அருகே ஓராண்டுக்கு முன்னர் விற்கப்பட்ட குழந்தை விழுப்புரத்தில் மீட்கப்பட்டது.

Child Rescue, which was sold a year ago in Salem

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நயனம் பட்டியில் வசிப்பவர் ராஜா (24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் மகள் மீனாவும் (23) இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாததால் இருவரும் திருப்பூரில் தங்கி அங்கு உள்ள பனியன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் ஓராண்டு கழித்து மீனாவுக்கு கடந்த ஜூன் மாதம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நேரம் அவரது மனநிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் சேலத்தில் உள்ள மீனாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கணவர் சம்பத்துடன் மீனாவை சேலத்துக்கு அழைத்து வந்து, அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சையில் மீனா இருக்கும்போதே கடந்த ஆகஸ்ட் மாதம் மீனா ராஜா தம்பதியரின் இரண்டு மாத குழந்தையை ரூபாய் மூன்று லட்சத்துக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஓரளவு தெளிவு பெற்ற மீனா குழந்தை மற்றும் கணவர் குறித்து விசாரித்துள்ளார். குழந்தையை விற்றுவிட்டதாக மீனாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். "கணவர் பற்றி தெரியாது. நீ இந்த விஷயத்தை இத்துடன் மறந்துவிடு" என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் தனது குழந்தையை மீட்க வேண்டும். அதற்கு முன் கணவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக திருப்பூருக்கு சென்று உள்ளார் மீனா. அங்கு கணவரை சந்தித்து நடந்ததைக் கூற இருவரும் சேர்ந்து ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் தங்களது குழந்தையை ரூ மூன்று லட்சத்திற்கு விற்கப்பட்டு உள்ளதாக கூறி குழந்தையை மீட்டுத் தர வேண்டும் என்று புகார் அளித்தனர்.

குழந்தையின் தாயார் மீனா பேட்டி

இந்த நிலையில் மீனா தனது கணவர் ராஜாவுடன் கடந்த திங்கள்கிழமை (நவ.18) சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ராமன் உத்தரவிட்டார். இதையடுத்து களத்தில் இறங்கிய காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் ஒரு தம்பதியிடம் விற்றதாக தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர். சேலத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட குழந்தை சேலத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து குழந்தை மீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

இதையும் படிங்க : தொப்புள் கொடி அறுக்காத நிலையில் வீசி எறியப்பட்ட பெண் சிசு!

ABOUT THE AUTHOR

...view details