சேலத்தில் நேற்று ஈரடுக்கு மேம்பாலத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் பேசுகையில், "சேலம் மாவட்டத்தில் 8 வழி சாலை திட்டமானது நல்லதொரு திட்டம். தொழில் வளம் பெருகும். ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒரு சில காரணங்களால், தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
அதனை எல்லாம் சரி செய்து அனைத்து விவசாயிகளையும் சமாதானப்படுத்தி 8 வழி சாலை திட்டம் அமைக்கப்படும். அதற்கான முயற்சியை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளும்" என்று கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சேலம் பூலாவரி, ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எட்டு வழிச்சாலை திட்டத்தினால் பாதிக்ககூடிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “எந்த ஒரு காலக்கட்டத்திலும் இந்த எட்டு வழி சாலைக்கு நிலத்தை வழங்க மாட்டோம். விவசாயிகளை சமாதானப்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்று முதலமைச்சர் கூறுகிறார். ஒரு பிடி மண்ணை கூட இந்தத் திட்டத்திற்காக நாங்கள் தர மாட்டோம்.
'8வழி சாலைகாக ஒரு பிடி மண்ணை கூட தர மாட்டோம்'-விவசாயிகள் ஆவேசம்! தொடர்ந்து முதல்மைச்சர் இதுபோன்று விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்த துடிப்பது அவரின் லாப நோக்கத்தில்தான். விவசாயியின் மகன் என்றும் விவசாயிகளின் வேதனை எனக்கு தெரியும் என்று சொல்லி வரும் முதலமைச்சர், மிகப்பெரிய இயற்கை வளங்களை அழித்து யாருக்காக இந்த எட்டு வழி சாலை அமைக்கிறார்? சாலை கட்டாயம் விவசாயிகளுக்கான சாலை அல்ல. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே” என்று தெரிவித்தனர்.