விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கலைச்செல்வி. சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் இவரது வீட்டில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
சேலம்: வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணமும் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.
Anti-corruption department raids the home of a regional transportation officer
தொடர்ந்து அவரது காரில் சோதனை நடத்தியதில் அதிலிருந்து 24 லட்சம் ரூபாய் பணம், 117 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் தங்கமணி தலைமையில தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இதேபோல விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர் .