மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டில் சேலம், சென்னை, ஒசூர், கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பாதுகாப்புத் தளவாடப் பொருள்கள் உற்பத்தி நிறுவனம் அமைக்கப்படும் என அறிவித்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான இரும்பாலை வளாகத்தில் புதியதாகப் பாதுகாப்புத் தளவாடப் பொருள்கள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்து சேலத்தில் உள்ள முன்னணி நிறுவன உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தலைமையில் நேற்று (நவம்பர் 25) நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில்...
- சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன்
- சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன்
- இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் வேல் கிருஷ்ணா
- தமிழ்நாடு சிறு, குறு தொழில் கூட்டமைப்பின் தலைவர் மாரியப்பன்
- ஏரோஸ்பேஸ் இன்ஜினியர் பிரைவேட் லிமிடெட் மேலாண் இயக்குநர் சுந்தரம்
- சேகோசர்வ் மேலாண் இயக்குநர் கதிரவன்