தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 30, 2022, 5:55 PM IST

ETV Bharat / city

ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் - பறிமுதல் செய்த பறக்கும் படை

சேலம் அருகே காவல் துறையினர் வாகனத்தணிக்கையின்போது உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

money confiscated due to without proper documents
ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சம்

சேலம்: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி எல்லையான புதுரோடு பகுதியில், வட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 10 லட்சம் இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக காரில் வந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவகுமார் என்பவரிடம் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் கொண்டுவந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூபாய் 10 லட்சத்தைப் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து சேலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களுக்கும் தலா மூன்று குழுக்கள் என 12 குழுக்கள் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சோதனையில் ஈடுபட்டு வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ரூ.11.50 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், லேப்டாப்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details