மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவர் செல்லூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஒன்பதாம் தேதி இரவு பணி முடிந்து தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது பி.மேட்டுப்பட்டி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் மதுரை தனியார் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சசிக்குமார் மூளை சாவு அடைந்தார்.