தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?' - ஒன்றிய அரசு

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என ஆய்வு செய்யப்பட்டுவருகிறது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹெல்டர் பேட்டி அளித்துள்ளார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் ஆய்வு
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் ஆய்வு

By

Published : Dec 24, 2021, 1:29 PM IST

மதுரை:மதுரை விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹெல்டர் இன்று (டிசம்பர் 24) செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த அறிக்கையைக் கேட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் சிறப்பான முறையில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டுவருகிறது.

ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் உள்ளன. அதனைத் தீர்க்கவே நாங்கள் நேரடியாகக் கள ஆய்வு செய்துவருகிறோம், இதற்கு அலுவலர்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்குகின்றனர்.

மேலும் தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எத்தனை பேருக்கு அளிக்க உள்ளோம் என்பதைக் கணக்கெடுப்பு முடிந்த பின்னரே கூற முடியும்" என்றார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் ஆய்வு

தொடர்ந்து அவர் பேசுகையில், "மத்திய அரசு பல திட்டங்களைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகச் செயல்படுத்திவருகிறது. அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் திட்டங்களுக்கான பலனைப் பெறுவதில் சிக்கல் நீடித்துவருகிறது.

அதனைக் களைந்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களை அறிவுறுத்திவருகிறோம்” எனத் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஷ் சேகர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:உ.பி.யில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: தமிழ்நாட்டிலும் ஊரடங்கா?

ABOUT THE AUTHOR

...view details