சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்குவது போல் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என இளையான்குடியைச் சேர்ந்த குறளரசன் உள்பட பலரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, பணியிலுள்ள முப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் தனி ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
சுயநலமற்றவர்கள்
இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்திருந்த நிலையில், உத்தரவின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "படை வீரர்கள் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் என குடும்பங்களை விட்டுப் பிரிந்து நாட்டின் நலனுக்காக பணிபுரிகின்றனர்.
சில நேரங்களில் எதிரிகளால், பயங்கரவாதிகளால் கொல்லப்படுகின்றனர். படை வீரர்கள் சுயநலமற்ற தியாகம் புரிந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.