மதுரை: தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவைச் சேர்ந்த முத்துபாண்டி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா, நாராயணபுரம் கிராமத்தில் கால்நடைகள் வளர்க்கும் கொட்டகை உள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படும் இது, மக்கள் பயன்பாடு இன்றி இருந்து வருகிறது.
எனவே, இதனை அகற்றி நாராயணபுரம் கிராமத்திற்கு பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க பலமுறை அலுவலர்களுக்கு மனு அளித்தோம்.