தமிழ்நாடு

tamil nadu

சடங்கு காரியங்கள் செய்ய வரும் நபர்களால் அசுத்தமாகும் வைகை

By

Published : Jun 23, 2021, 8:29 AM IST

சடங்கு சம்பிரதாயம் தொடர்பான விஷயங்களை மேற்கொள்ள வரும் நபர்களால் வைகை ஆறு தொடர்ந்து குப்பைக்கூளமாக மாற்றப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அசுத்தமாகும் வைகை
அசுத்தமாகும் வைகை

மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேலக்கால். தேனூர், திருவேடகத்திற்கு இடையில் ஓடுகின்ற வைகை ஆற்றுக்குள் ஒவ்வொரு அமாவாசையன்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமை நாள்களிலும் மூத்தோருக்கு திதி கொடுத்தல், பில்லி சூனியம் உள்ளிட்ட பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

அசுத்தமாகும் வைகை

தொடர்புடைய நபர்களும் சடங்குகளை மேற்கொள்ளும் புரோகிதர்களும், வள்ளுவர்களும் தொடர்ந்து வைகை ஆற்றை சுத்தம்செய்கின்றனர் என தேனூர் சுழியம் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் ஜெயக்குமார் புகார் தெரிவித்துள்ளார்.

அசுத்தமாகும் வைகை நதி

இது குறித்து அவர் கூறுகையில், "மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கு அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் மூலமாகத்தான் குடி தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. பெரும்பாலும் வைகை ஆற்றில் தண்ணீர் ஓடாதபோது இங்கு சடங்கு சம்பிரதாயங்கள் நிகழ்த்த வருகின்ற புரோகிதர்கள், அஸ்தி உள்ளிட்ட சம்பிரதாய பொருள்களை குடிதண்ணீர் கிணற்றின் உறையை திறந்து அதில் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். வைகையாற்றின் உள்ளேயும் அசுத்தம் செய்கிறார்கள்" என்கிறார்.

அரசு நடவடிக்கை தேவை

மன்றத்தின் செயலாளர் கார்த்திகை குமரன் கூறுகையில், "இதுபோன்ற சடங்கு சம்பிரதாயங்கள் நிகழ்த்த திருவேடகம் சோழவந்தான் வைகை ஆற்றுப்பகுதியில் தடை உள்ள காரணத்தால் தற்போது இவர்கள் அனைவரும் மேலக்கால் ஆற்றுப்பகுதியில் முற்றுகையிட்டுவருகின்றனர். இங்கிருந்து சற்று ஏறக்குறைய 24 ஊராட்சிகளுக்குத் தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. மேலும் அசுத்தம் செய்தால் தண்ணீரின் நிலை என்னவாகும் என்பதை அலுலவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்" என்றார்.

சடங்கு காரியங்கள் செய்யவரும் நபர்களால் அசுத்தமாகும் வைகை

தேனூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் கூறுகையில், "எத்தனையோ முறை அலுவலர்களிடம் முறையிட்டும் இதற்கு ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும். மக்களின் குடிநீர் ஆதாரத்தைப் பாதுகாப்பது மிக மிக அவசியம்" என்றார்.

இதையும் படிங்க:வெட்டப்படும் மரங்கள்.... கலங்கும் சமூக ஆர்வலர்கள்

ABOUT THE AUTHOR

...view details