தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 பேரின் விடுதலைக்கு உதவ வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் ரவிச்சந்திரன் மனு - ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலைக்கு உதவ வேண்டும்

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் பிரச்னையை தீர்க்க வேண்டும் என, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடசேனை சந்தித்து சிறைவாசி ரவிச்சந்திரன் மனு அளித்தார்.

Ravichandran petition
Ravichandran petition

By

Published : Jan 23, 2020, 6:50 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு மதுரை சிறையில் சிறைவாசியாக உள்ள ரவிச்சந்திரன் 15 நாட்கள் சாதாரண விடுப்பில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள், சாதாரண உடையணிந்த காவலர்கள், பல்வேறு நுண்ணறிவுத் துறை பிரிவினரின் பாதுகாப்புடன் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு 28 ஆண்டுகள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். நான் உள்ளிட்ட ஏழு பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது என தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி 16 மாதங்களாகிவிட்டன. மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

Ravichandran petition
எனது நீண்டகால சிறை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, தமிழ்நாடு அமைச்சரவை, ஆளுநருக்கு இடையிலான இணக்கமற்ற போக்கை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஏழு பேரின் விடுதலைக்கு ஆவன செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கையை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் எடுத்துரைத்து மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாட்டைத் தீர்த்து சட்டரீதியான எங்களது விடுதலைக்கு உதவிட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும்’ - ஜெயக்குமார் விமர்சனம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details