மதுரை:மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஓலிம்பஸ் கிரானைட் நிறுவனம், நாகராஜன், துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது 2013ஆம் ஆண்டு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் கீழவளவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், மத்திய அமலாக்கத் துறை, பண மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்து மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக நேரில் முன்னிலையாக, வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என துரை தயாநிதி, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார்.