தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'4 சட்டப்பேரவை இடைத்தேர்தல் சட்டப்போராட்டத்தால் நடைபெறவில்லை' - ஓ பன்னீர்செல்வம்

மதுரை: நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட பின்னரே தற்போது நடைபெறவுள்ளது. எந்தவொரு சட்டப்போராட்டம் நடைபெறவில்லை என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் சட்டப்போராட்டத்தால் நடைபெறவில்லை - ஓபிஎஸ்

By

Published : Apr 30, 2019, 9:33 AM IST

மதுரை தனியார் ஹோட்டலில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அப்போது அவர், நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது நடைபெறவுள்ளது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் எனத் தெரிவித்தார்..

எந்த ஒரு வழக்காடு மன்றத்தில் சென்று சட்டப்போராட்டம் நடத்தி, இந்த நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டார். துரைமுருகன் எப்போதும் கனவு உலகத்திலேயே இருப்பார் என கிண்டலடித்த ஓபிஎஸ், துரைமுருகன் கூறிய கருத்து கடந்த காலத்தில் இருந்து ஒவ்வாத கருத்தாக இருக்கிறது என விமர்சித்தார்.

தங்க தமிழ்ச்செல்வன் குறித்த கேள்விக்கு ஓ. பன்னீர்செல்வம், கடந்த தர்மயுத்தம் காலத்திலிருந்தே, தங்க தமிழ்ச்செல்வன் கருத்துக்கு தான் பதில் கூறியதே இல்லை என்றார். சட்டம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் என குறிப்பிட்ட அவர், ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து அங்கு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, மற்றொரு கட்சியில் பதவி பெற்று நீடிக்கின்றபொழுது, அவர் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது என்பது சட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.

மூன்று பேரும் அமமுக கட்சியில் இணையவில்லை என்றால், சட்டப் பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் வழங்கி இருக்கலாம். அவரிடம் வந்து விளக்கம் அளித்து இருக்கலாம் என கூறினார்.

தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒதுக்கீட்டில் அதிமுக குளறுபடி தற்போது சரியாகி விட்டதா என்ற கேள்விக்கு,

சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்காக பலர் விருப்பம் தெரிவிப்பார்கள். ஆனால் தேர்வு செய்வது என்னமோ ஒருவரை மட்டும்தான். எனவே மற்றவர்களுக்கு அடுத்த முறை கண்டிப்பாக வாய்ப்பு அளிக்கப்படும். அடிப்படைத் தொண்டன் கூட முதலமைச்சராக கூடிய தகுதி அதிமுக கட்சிக்கு உண்டு.

நடைபெற்று முடிந்த 38 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் மிகப்பெரிய வெற்றிபெறும். அதேபோல் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக அரசு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என பதிலளித்தார்.

மேலும் அவர், '2016ஆம் ஆண்டில் திமுகவுக்கு சாதகமாக கருத்துக் கணிப்பு அமைந்தது. ஆனால் அதிமுக ஆட்சி அமைத்தது. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு சென்றால் பதவி விலகுவது என்றுதான் அர்த்தம். மரியாதையாக ராஜினாமா செய்து சென்றிருக்க வேண்டும். அங்கு ஒரு கால் இங்கு ஒரு கால் வைத்து இருந்தால் அது நன்றாக இருக்காது.

அதிமுக தங்களது பலத்தை நம்பிய அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை. உள்ளாட்சித் தேர்தல் மிக விரைவாக நடைபெற உள்ளது' எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details