தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 2, 2021, 4:55 PM IST

ETV Bharat / city

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கடல் மீன்கள்

ஒத்தக்கடையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மீன் கடையில் இன்று ஒருநாள் மட்டும் ஒரு கிலோ கடல் மீன்கள், ஒரு ரூபாய்க்கு விற்பனையானது.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கடல் மீன்கள்
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கடல் மீன்கள்

மதுரை: மேலூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒத்தக்கடையில் வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் மீன் விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளார். இந்தக் கடையை மேதகு திரைப்படத்தின் இயக்குநர் கிட்டு தொடங்கிவைத்தார்.

திறப்பு விழாவான இன்று (செப்டம்பர் 2) அறிமுகச் சலுகையாக ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கடல் மீன்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. விற்பனை செய்யப்படும் மீன்கள் நேரடியாக மீனவர்களிடமிருந்து கொள்முதல்செய்யப்பட்டு விற்கப்படுகின்ற காரணத்தால் இன்று ஒருநாள் மட்டும் இந்தச் சலுகை என அறிவிக்கப்பட்டது.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கடல் மீன்கள்

அதுவும், கடைக்கு வரும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டதால் ஒத்தக்கடையைச் சுற்றியுள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக மீன் கடையில் குவிந்தனர்.

இதையும் படிங்க: ஆப்பிள் ஏர்பாட்ஸ் இலவசம் - ஊசி போட்டுக்கொள்ளும் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

ABOUT THE AUTHOR

...view details