சிவகாசியில் கடந்தாண்டு நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெண் தொழிலாளிகள் கார்த்தீஸ்வரி, ஹமீதா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ராமநாதன், அவரது மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.