தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொடங்கியது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா... - Displayed in Rajarajeshwari decoration

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 27, 2022, 8:04 AM IST

மதுரை:உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நேற்று(செப்.26) கோலாகலமாக துவங்கியது. இத்திருவிழா வரும் அக்டோபா் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் போது நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.

முதல்நாள் விழாவில் அம்மன், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நவராத்திரி உற்சவ நாள்களில் மீனாட்சியம்மனின் மூலவர் சன்னிதியில் அபிஷேகம், அலங்காரம், அா்ச்சனைகள் போன்றவை நடத்தப்படமாட்டாது என்பதால், கொலு மண்டபத்தில் (உற்சவர்) அலங்காரத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு தேங்காய் உடைப்பு அா்ச்சனைகள் செய்யப்பட்டன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா

நவராத்திரி விழாவையொட்டி திருக்கல்யாண மண்டபத்தில், பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், கொலு அலங்கார பொம்மைகள் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடா்பான பொம்மைகள் மற்றும் இதர பொம்மைகள் கொலுச்சாவடியில் கொலுவாக வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள் அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்து கொலுவையும் பார்த்து ரசித்து சென்றனர்.

இதையும் படிங்க:"மிஸ் தமிழ்நாடு" பட்டம் வென்று "மிஸ் இந்தியா" போட்டிக்கு தேர்வான கூலித்தொழிலாளி மகள்

ABOUT THE AUTHOR

...view details