நெல்லை மாவட்டம் தென்காசியில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்கத் தலைவராக இருந்த முகமது மைதீன் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து தென்காசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பின்னர் மதுரையில் உள்ள வகுப்புவாத மோதல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அங்கு விசாரணை முடிந்த பின், இந்தக் கொலை வழக்கில் கைதான முருகன், தம்புரான் என்ற கிருஷ்ணன், பொன்னையா ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.