தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சிகளில் மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் 19ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ’உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர் போன்ற உயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை.