தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'விமானத்தில் பறக்க ஆசை' - மாணவர்களின் கனவை நனவாக்கிய சமூக ஆர்வலர்கள்! - மாணவர்களின் கனவை நனவாக்கிய சமூக ஆர்வலர்கள்

மதுரை: விமானத்தில் பறக்க ஆசைப்பட்ட நடுத்தர வகுப்பு மாணவ, மாணவிகளின் கனவை தனியார் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நனவாக்கியுள்ளனர்.

விமானத்தில் பறக்க ஆசை

By

Published : Sep 27, 2019, 8:07 AM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார்ப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில், சிவகாசியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சொந்த செலவில் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

சென்னைக்குச் சென்ற மாணவ, மாணவிகளை ஒரு நாள் முழுவதும் அங்கு உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றி காண்பிக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவிகளும், பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த உற்சாகமடைந்தனர். பயணத்தை முடித்த மாணவர்கள் மீண்டும் சென்னையிலிருந்து மதுரை வந்தனர். அவர்களைப் பெற்றோர்கள் வரவேற்றனர்.

மாணவர்களின் கனவை நனவாக்கிய சமூக ஆர்வலர்கள்

இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாணவர் சந்தன மாரியப்பன், 'நான் முதல் முறையாக விமானத்தில் சென்று வந்துள்ளேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை விமானத்தில் அழைத்துச் சென்றதற்கு, நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனைக் கண்டு எங்கள் பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்' எனக் கூறினார்.

இதையும் படிங்க:

சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் ‘Know Your Neighbour’!

ABOUT THE AUTHOR

...view details