மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்றது. இந்தப் பேருந்து திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது முன்னே சென்ற வாகனத்தை முந்திக்கொண்டு தவறான பாதையில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த மற்றொரு முதியவரும் உயிரிழந்தார்.