மதுரை:மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் 3 மாணவர்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இது குறித்து மதுரை மாநகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார், துணை ஆணையர் தங்கதுரை, உதவி ஆணையர் அக்பர்கான் ஆகியோர் உத்தரவிட்டனர்.
பள்ளி மாணவன் செல்போனில் ஆபாச வீடியோ: அதன் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் விமலா தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மாணவர்களுடன், பெண் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறதா? என்று சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் அந்த வீடியோ திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவரின் செல்போனுக்கு வந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
பள்ளி மாணவனிடம் விசாரணை:இதையடுத்து அந்த மாணவரை வரவழைத்து அந்த ஆபாச வீடியோவை அனுப்பியது யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீடியோவை தனது மாமா வீரமணி (39) என்பவர் அனுப்பியதாக தெரிவித்தார்.
அதன்பேரில் தனக்கன் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த வீரமணியை காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவர்களுடன் பெண் உல்லாசமாக இருக்கும் வீடியோவை தான் எடுத்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
பள்ளி மாணவன் மாமாவை பிடித்த காவல்துறை: தனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல் கடையில் வீரமணி பணிபுரிந்து வருகிறார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னைக்கு ரயிலில் சென்றார். அப்போது அவருக்கு மதுரையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையான 45 வயது பெண் அறிமுகமானார்.
ஆசிரியைவுடன் பழக்கம்: இதையடுத்து அவர்கள் தங்களின் செல்போன் எண்களை பறிமாறிக் கொண்டனர். அதன்பிறகு இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்தனர். இதனால் அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமாகி திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டது.
ஆசிரியையின் வீட்டிற்கு வீரமணி அடிக்கடி சென்று வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு மீறிய உறவு விவகாரம் ஆசிரியையின் கணவருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து அவர் ஆசிரியையை பிரிந்து சென்று விட்டார்.