தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆணும், பெண்ணும் சமம்- பாடம் எடுக்கும் பள்ளிக்கூட மாணவர்கள்... - Students street play about women empowerment

உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக மதுரையை சேர்ந்த பள்ளி மாணவிகள் சிறு நாடகத்தின் வழியே ஆண், பெண் சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆணும் பெண்ணும் சமம்- பாடம் எடுக்கும் பள்ளிக்கூட மாணவர்கள்
ஆணும் பெண்ணும் சமம்- பாடம் எடுக்கும் பள்ளிக்கூட மாணவர்கள்

By

Published : Mar 8, 2022, 12:35 PM IST

மதுரை:ஆண்களால் சாதிக்க முடிந்த எதையும் பெண்களும் சாதித்துக் காட்ட முடியும் என்பதை உணர்த்தவே உலகப் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது என்று சொல்லும் இந்த பள்ளி குழந்தைகள் ஆணுக்குப் பெண் சமம் என்பது தவறு ஆணும் பெண்ணும் சமம் என்பது தான் சரி என்று வகுப்பு எடுக்கின்றனர். இந்த மாணவர்களின் ஆசிரியர் சுலைஹா பானு பள்ளிக் குழந்தைகளின் பங்கேற்பின் வாயிலாக ஆண் பெண் சமத்துவத்தைப்போதித்து வருகிறார்.

மதுரை விராட்டிபத்து அருகே உள்ள முத்துத்தேவர் காலணியில் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளின் மூலமாக அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு சிறு நாடகத்தின் வழியே ஆண் பெண் சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் குழந்தைகளின் கேள்விகளுக்கும் குழந்தைகளைக்கொண்டே பதிலளிக்கிறார்.

நாடகத்தின் வாயிலாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே நேரம், அதில் பாத்திரமாக நிகழ்த்தும் குழந்தைகளுக்குள் அந்த உணர்வை முழுவதுமாக ஏற்படுத்தவும் முடிகிறது, என்கிறார் ஆசிரியர் சுலைஹா பானு. கணீரென்ற குரலில் மாணவிகளின் தெருக்கூத்து, காண்போரை வியக்க வைக்கிறது.

ஆணும் பெண்ணும் சமம்

7-ஆம் வகுப்பு பயிலும் கிஷோர் குமார் என்ற மாணவர் கூறுகையில், ஆணுக்குப் பெண் சமம் என்று சொல்லக்கூடாது. ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் சரியான பார்வை.பெண்களுக்குக்கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளுக்கு அதிக ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். ஆணும் பெண்ணும் எப்போதும் சமம்தான்' என்கிறார்.

9-ஆம் வகுப்பு பயிலும் மாணவி சுவாதி கூறுகையில், 'ஆண்களால் செய்ய முடிந்த எதுவும் பெண்களாலும் செய்ய முடியும். சிலம்பம், ஜூடோ,ஹேண்ட்பால் போன்றவற்றில் பயிற்சி மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்கிறேன். ஆணும், பெண்ணும் தனித்தனியாக இல்லை என்பதே எனது கருத்து' என்கிறார்.

ஆணும் பெண்ணும் சமம்- பாடம் எடுக்கும் பள்ளிக்கூட மாணவர்கள்

பாலின சமத்துவம் குறித்த தெருக்கூத்து

அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஆசிரியர் சுலைஹாபானு கூறுகையில், 'எந்த ஒரு சின்ன விசயமாக இருந்தாலும், செயல்பாட்டு வழிமுறையில் மாணவர்களிடம் சொல்லும்போது அந்தக் கருத்து அவர்களுக்குள் ஆழமாகப் பதிந்துவிடும். அந்த அடிப்படையில், உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, பள்ளிக் குழந்தைகளைக் கொண்டே இப்பகுதியில் பாலின சமத்துவம் குறித்து தெருக்கூத்து நடத்துகிறோம்.

இப்பகுதியிலுள்ள குழந்தைகள் இதனைக் கண்டு தங்களுக்குள் அந்த உணர்வை பெறுகின்றனர். வெறும் சொற்பொழிவாகவோ, உரையாகவோ அன்றி குழந்தைகளைப் பங்கேற்பாளர்களாக மாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வழக்கமாகக் கொண்டு வருகிறேன். என்னுடைய வகுப்பறை செயல்பாடுகளில் பங்கேற்பு வழிமுறையில் மாணவர்களுக்குக் கொண்டு செல்வது வழக்கம்.

அதனை இப்பகுதியிலுள்ள மாணவ, மாணவியரிடமும் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டுக் கொண்டு சென்றது மகிழ்ச்சியளிக்கிறது. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வது மட்டுமல்ல. ஆணுக்கு நிகராக எதையும் பெண்கள் செய்து காட்ட முடியும் என்பதை எனது மாணவி சுவாதி நிரூபித்து வருகிறார். வீரமங்கை வேலுநாச்சியாரைப்போன்று மாணவிகள் ஒவ்வொருவரும் உருவாக வேண்டும் என்பதே இந்த உலக மகளிர் தினத்தில் நான் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி' என்கிறார்.

மாற்றத்தை மற்றவர்களிடம் உருவாக்க நினைப்பதைவிட, அந்த மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்குவது சிறப்பு. அந்த உணர்வைத்தான் ஆசிரியர் சுலைஹாபானு மாணவர்களிடம் விதைத்து வருகிறார்.

இதையும் படிங்க:பெண்மையை போற்றுவோம்! உலக மகளிர் தின வாழ்த்துகள்

ABOUT THE AUTHOR

...view details