தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 3, 2020, 4:13 PM IST

Updated : Nov 3, 2020, 7:13 PM IST

ETV Bharat / city

'ஆன்லைன் கேமிங்'க்குத் தடை கோரிய வழக்கு - பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகைக்கு நோட்டீஸ்!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு

16:08 November 03

மதுரை:தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யக்கோரிய வழக்கில், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இம்மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, "விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர்.

பொது மக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என அறிந்தும், இவ்வாறு செயல்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினர். அப்போது 'ப்ளே கேம்ஸ்' (Play games) தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'Dream level' விளையாட்டில் கிரிக்கெட்டிற்காக விளம்பரம் கொடுப்பவர்களை எதிர்மனுதாரராக சேர்த்துள்ளனர் என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், கிரிக்கெட்டில் சூதாட்டம் இல்லையா? கிரிக்கெட் அணிகளில் மாநில பெயரை பயன்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பினர். அதனை  பயன்படுத்தவில்லை எனில் யாரும் கிரிக்கெட்டை பார்க்க மாட்டார்கள்.  இது முற்றிலுமாக மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கி, தவறாக வழிகாட்டி மக்கள் பார்க்க வைக்கப்படுகிறார்கள்.

மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள் என தெரிவித்தனர். இதையடுத்து இவ்வழக்கில் மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Last Updated : Nov 3, 2020, 7:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details